Tuesday 29 June 2021

சென்ட்ரல் விஸ்டா திட்டத்தின் அரசியலும் பொருளாதாரமும்!!!!

சென்ட்ரல் விஸ்டா என்பது புது தில்லியின் ரைசினா குன்றில் அமைந்துள்ள இந்தியாவின் மத்திய நிர்வாக மையமாகும். இந்த பகுதியை புதுப்பிப்பதற்கான தற்போதைய மறுவடிவமைப்பைக் குறிப்பது தான் செண்ட்ரல் விஸ்டா மறு சீரமைப்பு திட்டம் (Central Vista Redevelopment Project). பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சியின் போது சர் எட்வின் லுடியன்ஸ் மற்றும் சர் ஹெர்பர்ட் பேக்கர் ஆகியோரால் இந்த பகுதி வடிவமைக்கப்பட்டது, சுதந்திரத்திற்குப் பிறகு  நிர்வாக பணிகளுக்காக இந்த பகுதி இந்திய அரசாங்கம்  தக்கவைத்துக் கொண்டது


நாம் மெத்தப்படித்தவர், அறிவில் சிறந்தவர், பகுத்தறிவாளர் என்று எண்ணும் நபர்கள் கூட அரசியல் என்று வந்ததும் நம் அறியாமையை பயன்படுத்தி நம்மை முட்டாளாக்க பார்கிறார்கள்.  சசிதரூர்ரின் ட்வீடர்ப் பதிவு ஒரு உதாரணம்.  இவர் 2018 ஆம் ஆண்டு மலேசிய சுற்றுபயணம் பற்றி தன் ட்வீடர் பதிவில் "மலேசிய நாட்டு பாரளுமன்றம் பொறாமை ஏற்படுத்துவதாகவும், நமது பாரளுமன்றத்தின் கட்டமைப்பு குறைபாடுகள் எறாளமாக உள்ளதாகவும், தொழில் நுட்ப மேம்பாட்டு மிகவும் அவசியம் என்றும் குறிப்பிட்டார். இன்று சென்ட்ரல் விஸ்டா தேவையா என்கிறார். அதுமட்டுமின்றி ரூ.20,000 கோடி நிதியை கோவிட் எதிரான செலவுகளில் சேர்கலாமே என்று பதிவிடுகிறார். ஐந்தாண்டு திட்டம், ஆண்டிற்கான நிதி நிலை அறிக்கை, முதலீட்டு நிதி திரட்டுதல் என்பதை பற்றி அடிப்படை விவரம் தெரியாதவரா இவர்?


இந்த சென்ட்ரல் விஸ்டாவின் ரூ.20,000 கோடி என்பது கையியுள்ள நிதியில்லை, அது இந்த ஆண்டிற்குள்ளாக செலவிடவோ, திரட்டவோ கூடிய நிதியுமில்லை. இது  அடுத்த ஆறு ஆண்டுகள் இந்த திட்டத்தின் கீழ் திரட்டவும்- செலவிடவும் தோராயமாக கணகிடப்பட்டுள்ள தொகை மட்டுமே. அதாவது  இந்த தொகையை ஆறாக பிரித்தால், சுருக்கமாக சராசரியாக இந்த திட்டத்தின் கீழ் ஆண்டிற்கு 3000 கோடி செலவிடப்படலாம். இந்த நிதியாண்டு மருத்துவம், சுகாதாரம், என்று ரூ.2 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது, அதில் ரூ.35,000 கோடி கோவிட் தடுப்பு நடவடிக்கைக்கு வழங்கப்பட்டுள்ளது. இத்த  பட்ஜட்டின் சுகாதார செலவினத்தோடு ஒப்பிட்டு பார்த்தால் சென்ட்ரல் விஸ்டாவுக்கு இந்த ஆண்டு ஒதுக்கப்பட்ட நிதி ரூ.1339 கோடிகள் மட்டுமே (இது சுகாதாரத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் 0.7% ஆகும்)


 பாராளுமன்ற கட்டிடத்தை புணரமைக்க அவசியம் குறித்து பலரும் பல்வேறு சமயங்களில் குறிப்பிட்டிருந்தனர். 2012 ஜூலை திருமதி மீனாக்குமார்(Speaker, Lok Sabha) , 2015 டிசம்பர் திருமதி சுமித்ரா மாஜன் மற்றும் 2019 ஆகஸ்ட் திரு ஓம் பிர்லா. இவர்கள் குறிப்பிட்ட காரணங்களில் பிரதானமானது, போதுமான இருக்கை வசதியின்மை, குறிப்பாக 2026க்கு பின் மாநிலங்களுக்கான உறுப்பினர் எண்ணிக்கை சீரமைத்தல், பெண்களுக்கான இட ஒதுக்கீடு, 90 ஆண்டுகள் பழமையான கட்டிடத்தில் தொழில் நுட்ப வசதிகள் ஏற்படுத்துவதில் உள்ள சிக்கல்கள்,.....

பாராளுமன்ற கட்டிடம் என்பது இந்த சென்ட்ரல் விஸ்டா திட்டத்தின் ஒரு அங்கம் மட்டுமே. இந்த திட்டத்தின் நோக்கம் மத்திய அரசின் அலுவலக அமைப்புகளை, பாதுகாப்பை, நிர்வாக  மையங்களை மேம்படுத்துவதாகும்.


சரி, பாராளுமன்றத்தை புதுபிக்க தேவையான முக்கி காரணங்களை முதலில் இங்கு காண்போம். கட்டிடவியல், புவியியல் சார்ந்த தேவைகள் குறித்து, பாதுகாப்பு தேவைகள் குறித்து அறிய கட்டிடவியல் நிபுணர் இந்த செண்ட்ரல் விஸ்டா திட்டத்தின் வடிவமைப்பாளர் திரு பிம்பல் பட்டேல் அவர்களின் காணொலி விளக்கவுரையை கேட்கவும்.

இணைப்பு: https://youtu.be/vX3d5RO8H1M 

பாராளுமன்ற புணரமைப்பதில் உள்ள பொருளாதார, அரசியல் காரணிகளை விரிவாக காண்போம்.

1946 நவம்பர், மாகாணங்கள் மற்றும் சுதேச மாநிலங்களுக்கு அரசியலமைப்புக் குழுவில்அந்தந்த மாநிலங்களின் மக்கள்தொகை விகிதாசாரத்திற்கு ஏற்ப 1: 1மி, அதாவது ஒரு மில்லியன் (10 லட்சம்) மக்களுக்கு ஒருவர் ன்று பிரதிநிதித்துவம் ஒதுக்கப்பட்டன. மாகாணங்கள் 292 உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும், அதே சமயம் சுதேச மாநிலங்கள் குறைந்தபட்சம் 93 பிரதிநிதிகளை அனுப்ப வேண்டும். இதே போன்று 1950 அரசியலைப்பு சட்டம்  நேரடி தேர்தல்களை நடைமுறைப்படுத்த மாநிலங்களுக்குள் எல்லைகளை தொகுதிகளை பிரிக்க வழி வகுத்தது. அதன் அடிப்படையில் மாநிலங்களுக்கு பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டது. (Refer: Delimitation Commission 1952, 1962, 1972, 2002). இதில் இருந்த இரண்டு விதிகள் மாநிலங்களுக்கிடையே சரி, மாநிலங்களில் உள்ள தொகுதிகளுக்கிடையெ சரி மக்கள் தொகையின் விகித்தத்திற்கேற்ப பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டிருக்க வேண்டும்.

மேலே உள்ள பட்டத்தில், குறிப்பிட்ட சில மாநிலங்களில் கடந்த 50 ஆண்டுகளில் ஏற்பட்ட மக்கள் தொகை பெருக்கத்தை காணலாம். ஆனால் அதற்கேற்ப பிரதிநிதித்துவம் மாற்றப்படவில்லை. 1976 ஆம் ஆண்டு 42 வது சட்டதிருத்தத்தின் மூலம் மாநிலங்களுக்கு வழங்கப்பட்ட பிரதிநிதித்துவம் மாற்றுவது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. குறிப்பாக மக்கள் தொகையை கட்டுப்படுத்தும் நோக்கில் இது நடைமுறைப்படுத்தப்பட்டது. பின் 2001யில் 84வது சட்டத்திருத்தம் இதனை 25 ஆண்டுகளுக்கு நீட்டித்தது (அதாவது அந்த சட்டம் 2026 வரை தான் செல்லுபடியாகும்.) சுருங்க கூறினால், 1971 யில் 54 கோடி மக்களுக்கு 545 பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டது. இன்று 130 கோடி மக்களுக்கும் அதே 545 பிரதிநிதிகள் என்பது ஏற்ப்புடையதன்று. இப்போதும் மீண்டும் அதனை நீட்டித்தல் உலகளவில் ஜன நாயக நடுகளில் மக்கள் தொகை, பிரதிநிதித்துவ விகித்ததில் இந்திய பின் தக்கியே இருக்க நேரிடும். 2026 யில் ஏற்படக்கூடிய பிரதிநிதித்துவ மாற்றத்தில் பெரிதும் இலாபமடையக்கூடிய மாநிலங்கள் பற்றி கீழே உள்ள வரைபடம் காட்டுகிறது.

இந்த வரைபடத்திலிருந்து உத்திரப்பிரதேசம், பீஹார், ராஜஸ்தான் போன்ற மாநிலங்களுக்கு அதிகமான கூடுதல் பிரதிநிதித்துவம் கிடைக்கும், ஆனால் தமிழ் நாடு, கேரள, ஹிமாஜலம் போன்ற மாநிலங்கள் குறைந்த அளவில் கூடுதல் பிரதி நிதித்துவம் ஒதுக்கப்படும். இதற்கு முக்கிய காரணம் 1971-91 களில் நடைமுறைப்படுத்தப்பட்ட மக்கள் தொகைக்கட்டுப்பாடே ஆகும். இதனை அரசியல் காரணம் மட்டுமே சொல்வது ஏற்றதன்று, பொருளாதாரமே முக்கிய காரணம், உதிரப்பிரதேசம், பிஹார் போன்ற மாநிலத்தின் பொருளாதாரம் பெறுமளவு விவசாயம் சார்ந்தது, தொழில் துறையோ, சேவைத்துறையோ சார்ந்த மாநிலங்களில் மக்கள் தொகை கட்டுப்பாடு ஏற்க்கப்படுள்ளது என்பதை கீழே உள்ள வரைபடத்தில் காணலாம்.

அரசியலமைப்பு குழுவில் பீமாராவ் அம்பேத்கர் வாதிட்டது போல அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படை நிர்வாக உறுப்புகள் குடிமக்களே. மக்கள் தொகைக்கு ஏற்ப பிரதிநிதித்துவம் என்பதே மக்களாட்சியின் கோட்பாடு. 2026 ஆம் ஆண்டு இதை மறுசீரமைப்பது மிக அவசியம் ஆகும்.

இந்த திட்டத்தில் செயல் முறை விதிமீறல் ஏற்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டது. செப்டம்பர் 2019 ( கோவிட்-19 துவங்குவதற்கு முன்னே) திட்ட வடிவைப்பாளர், ஆலோசகரை தேர்ந்தெடுக்கும் வழிமுறை மத்திய பொதுப்பணித்துறையால் (CPWD) துவங்கப்பட்டது. இரண்டு நிலைகளில் இது நடத்தப்பட்டது, அதற்கான ஏலம் (Bidding) 2019 செப்டம்பர் 12 ஆம் தேதி அறிமுக கூட்டத்தில் 18 நிறுவனம் பங்கேற்றது. இதன் தொடர்ச்சியாக தொழில்நுட்ப ஏலம் செப்.30 அன்று பரிசீலிக்கப்பட்டது, அதில் 6 நிறுவனம் அக்.11 அன்று தங்கள் அனுகுமுறையை காணொலி விளக்கமளிக்க  அழைக்கப்பட்டது. இறுதியாக 4 நிறுவனங்கள் தேர்நதெடுக்கப்பட்டு, அவற்றின் நிதி ஏலம் பரிசீலிக்கப்பட்டது. 80 சதவீத மதிப்பீடு தொழில்நுட்ப தரத்திற்கும், 20 சதவீத மதிப்பீடு நிதி ஏலத்திற்கும் வழங்கப்பட்டு M/s HCP Design Planning Pvt Ltd தேர்வு செய்யப்பட்டது.

மேலும் படிக்க: https://pib.gov.in/PressReleseDetailm.aspx?PRID=1589177

 கோவிட் இடர்பாட்டிற்கு இடையில் இது அவசியமா என்ற கேள்வி பரவலாக உள்ளது.

 இந்த திட்டம் ஆறு ஆண்டுகளில் நடைமுறைப்படுத்த நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆண்டிற்கை சராசனியாக 3000-4000 கோடிகள் மட்டுமே ஒதுக்கப்படும். இது நம் நாட்டின் நிதி நிலையின் அளவில் (30-34 இலட்சம் கோடி) களில் 0.1%(அதாவது ரூ.1000 திற்கு ரூ.1 மட்டுமே) இதனை காலம் தாழ்த்துவதால் நிறுவனத்திற்கான இழப்பீடு, பணவீக்க இழப்பீடு, தொழிலாளர் வாழ்வாதார இழப்பீடு என்று கூடுதல் செலவுகளை எதிர்கொள்ள நேரிடும்.

 இந்த திட்டம் காலத்தின் கட்டாயம், இது எந்த விதத்திலும் கோவிட் நிவாரனப்பணிகளை பாதிக்காது என்பது அரசு தரப்பு வாதம்.

 இது போன்ற கட்டுமான வளர்ச்சி திட்டம் அதிக மறைமுக வேலை வாய்ப்புகளை உறுவாக்கும், அது பொருளாதார மீட்சிக்கும் உதவும்.

Tuesday 8 June 2021

Vaccine Allocation Criteria: ஓரவஞ்சனை செய்யும் இந்திய ஒன்றியம்!!

 Reply to Respected Iyan Karthikeyan (YouTurn),

Regarding his "Biased and Irrational" Interpretations in the following video: https://www.youtube.com/watch?v=zYCzH8ZfGlw&t=5s 

FAct checKEr Anne!!

Your Analysis is Biased and Irrational (அதாவது பகுத்தறிவற்றதாக உள்ளது in your words) ஆம், இது பகுத்தறிவற்ற, ஒருசார்புடைய, நியாயமற்ற பகுப்பாய்வு.

Vaccine (தடுப்பூசி) - Administered to prevent the disease intensity. (Preventive Medication: a substance used to stimulate the production of antibodies.) It is not CURATIVE MEDICATION (Actions and treatments correcting a harmful or troublesome condition.)

Allocation of vaccine to states (Inter-State Equitable distribution) is based on Population size and Intensity of cases. That is Responsibility of Indian Union Govt. (இந்திய ஒன்றிய அரசு)Bharat Sarkar

Similarly, Intra-State distribution (i.e. among the Districts) should be based on the similar criteria. This is Responsibility of the respective State Government (மாநில அரசு எ.கா.: தமிழ்நாடு)

As per Liberalized Vaccination Policy (dated: 28 Feb 2021): The UoI from its share will allocate vaccines to States/UTs based on criteria of

1.     performance (speed of administration, average consumption)

2.     Extent of infection (number of COVID-19 cases).

3.     Wastage of vaccines would also be considered in the criteria and would affect the allocation negatively.

Based on the above criteria, a State-wise quota would be decided and communicated to the States/UTs in advance.



மக்கள் தொக்கையின் அடிப்படையில் தடுப்பூசி முகாம்கள் அமைக்கபட்டுள்ளது என்று பார்த்தால், உத்திர பிரதேசம், ராஜஸ்தான், மகாராஷ்டிரம், கேரளா உடன் ஒப்பிட்டால் தமிழ்நாடு, ஆந்திரம் போன்ற மாநிலங்கள் மிகவு பின் தங்கியே காணப்படுகின்றது.

உத்திர பிரதேசமா, கர்நாடகம், மத்திய பிரதேசம், மஹாராஷ்டிரம் போன்ற மாநிலங்கள் கிட்ட தட்ட 4000 அதற்கும் மேலாக தடுப்பூசி மையங்களை அமைத்துள்ளதை காண்க.

நம்மை விட மக்கள் தொகையில் குறைவான கேரளம், ஆந்திரம் கூட நம்மை விட அதிகமான தடுப்பூசி மையங்களை அமைத்திருப்பது தெரிகிறது.

மக்கள் தொகையில் நமக்கு சற்று சமமாக உள்ள குஜராத் மாநிலம் கூட நம்மை விட இரண்டரை மடங்கு அதிக மையங்களை அமைத்துள்ளது.

இல்லை, தடுப்பூசி முகாம்களின் எண்ணிக்கையை பூகோல பரப்பலவோடு ஒப்பிட்டு பார்த்தால் கூட தமிழ்நாடு, பிற மாநிலங்கள் மத்திய பிரதேசம், ராஜஸ்தான், அந்திரா போன்ற மாநிலங்களை விட பின்தங்கியே உள்ளது.



இதனை இப்படி ஒப்பிடும் முறை சரியானதா என்று சற்று பகுத்துப் பார்த்தால் புரியும். தடுப்பூசி முகாம்களின் எண்ணிக்கை ஒரு காரணியாக எடுத்துக் கொள்ள முடியாது, ஏன் என்றால் அந்த முகாம்கள் ஒன்றுபோலவோ, ஒரே அளவினதாக, சமமான வசதிகளை கொண்டதாகவோ இருக்க வாய்ப்புகள் குறைவு.

Source: https://github.com/CSSEGISandData/COVID-19

மக்கள் தொகையையும் (Population Size), பாதிப்பின் அளவையும் (Intensity of COVID-19 Infection) அடிப்படையாக கொண்டே முதல் தவனை தடுப்பூசிகள் வழங்கப்பட்டிருக்க வேண்டும். மக்கள் தொகை அடிப்படையில் உத்திர பிரதேசம் பெரியதாக இருந்தாலும் பாதிப்பின் அளவில் கேரள, மகாராஷ்ரம் நிலை சற்று மோசமாக இருந்தது தெரிகிறது. அதன் விவரம் கீழ்வரும் பட்டியலில் காணலாம்.


#Source: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1715269

@Source: https://www.hindustantimes.com/india-news/covid19-vaccine-tracker-which-state-has-received-how-many-doses-so-far-101610593001839.html

$ Source: https://github.com/CSSEGISandData/COVID-19 

பின் இரண்டாவது அளவுகோளுக்கு வருவோம்.

“Speed of Administration” criteria எதன் அடிப்படையில் கணக்கிட முடியும்?

Data Source: https://dashboard.cowin.gov.in/

Phase I Vaccination முதல் கட்ட தடுப்பூசியானது சுகாதார பணியாளர்களுக்கும்(HCWs), முன்களப்பணியாளர்களுக்கும் (FLWs) செலுத்தப்பட்டது என்பது குறிப்பிடதக்கது. இந்த கட்டத்தில் தமிழ்நாடு தடுப்பூசி பணிகளில் மந்தமாக செயல்பட்டிருப்பது தெரியவருகிறது. அதற்கு முக்கிய காரணங்கள் தேர்தல், தடுப்பூசி எதிர்ப்பு பிரசாரங்கள், என்பவை குறிப்பிடதக்கவை ஆகும்.

Phase II Vaccination இரண்டாம் கட்ட தடுப்பூசி செலுத்துதல் 45-60 வயது முதியவர்களுக்கு செலுத்தப்பட்டது. தமிழ்நாட்டின் இந்த கட்டத்தில் தான் தடுப்பூசி செலுத்துல் வேகம்பிடித்தது என்று கூறலாம். தேர்தல் நடந்த வாரம் சற்று பின்னடைவை பார்த்து பின் ஏப்ரல் மூன்றாவது வாரம் இது மீண்டும் வேகமெடுத்துள்ளது.

தடுப்பூசி செலுத்துதல் குறித்த நிலையை காட்டும் இந்த வரைப்படத்தை மற்ற மா நிலங்களின் நிலையையும் ஒப்பிட்டு நோக்கினால் ஒன்று தெளிவாக தெரியும். என்னவென்று பார்ப்போம்…

இந்த வரைபடம் காட்டுவது, உத்திர பிரதேசம், மத்திய பிரதேசம், பிஹார், கேரள போன்ற மாநிலங்களில் தடுப்பூசிகளின் மேலாண்மை நல்ல முறையில் இருந்தது தெரிய வருகிறது. குறிப்பாக தமிழ்நாட்டின் தடுப்பூசி செலுத்தல் நிலை தரவுகளை சற்று நோக்கினால் ஒரு விஷயம் புரியவரும், அதாவது ஜனவரி 16 துவங்கி பிப்ரவரி 27 தேதி வரையிலும் தமிழ்நாடு அரசு முதல்-தவனையில் (First Instalment of Vaccine) இந்திய ஒன்றியம் வழங்கிய தடுப்பூசிகளில் வெறும் 60% ஊசிகளை மட்டுமே பயன்படுத்தி இருந்தது. இதைதான் அவர்கள் “Speed of Administration” Criteria அளவுகோளாக கொண்டு மறு தவனை தடுப்பூசிகளை வழங்கியுள்ளனர்.

அது மட்டுமின்றி, தடுப்பூசிகளை வீனடிப்பது. இது ஒரு எதிர்மறை அளவுகோள். இது அளவுகோள் மூன்று (Wastage of Vaccine dose). தமிழ்நாட்டின் தடுப்பூசி மேலாண்மையை மற்ற மாநிலங்களுடன் ஒப்பிட்டு பார்த்தால், இதுவும் மோசம் தான். 

இப்போது உள்ள “விடியல்” அரசும், முன்பு இருந்த “வெற்றி நடை” அரசும் தான் தமிழ்நாட்டு மக்களை வஞ்சிக்கின்றது என்பதே உண்மை. ஆட்சியில் இல்லாத போது தடுப்பூசி பற்றி அவதூறு பரப்புவதும், அரசியல் செய்கிறேன் – அவியல் செய்கிறேன் என்பதும், ஆட்சிக்கு வந்ததும் ஆக்கப்பூர்வமான செயல்களில் கவனம் செலுத்தாமல் “மத்திய அரசா – ஒன்றிய அரசா” என்று வீண்விவாதம் செய்வதுமாக இருக்கிறார்கள். தமிழ் நாட்டின் மக்கள் தொகைக்கோ, அதன் பூகோல பரப்பளவிற்கோ ஏற்ற தடுப்பூசி மையங்கள் கூட அமைக்கவில்லை என்ற இந்த நிலை கோவிட் தடுப்பூசி மேலாண்மையில் உத்திர பிரதேசம், பீகார் போன்ற வளர்ச்சியில் பின்தங்கிய மாநிலங்களை காட்டிலும் தமிழ்நாடு அரசுகள் மோசமாகவும், கவனக்குறைவாகவும்  இருப்பதை புள்ளிவிவரம் காட்டுகின்றது.

இதனை சரி செய்யாமல், மத்திய அரசு (இந்திய ஒன்றியம்) பாரபட்சமாக தடுப்பூசிகளை ஒதுக்கீடு செய்வதாக குற்றம் சாட்டுவது நல்ல ஆட்சி முறையாகாது. 

ஒரு விஷயத்தின் காரண, காரணிகளை முழுவதுமாக ஆராய்ந்து, பாரபட்சமின்றி, பகுப்பாய்வு செய்வதே “பகுத்தறிவான, முரண்பாடற்ற” செயலாகும். 

மாற்று கருத்துக்கள் இருப்பின் தரவுகளுடன், நியாயமான தர்கத்தை முன் வைக்கலாம்.

சரி அடுத்த விஷயம்,

35,000 கோடிக்கு கணக்கு கேட்டாங்களா? அன்னே! இப்ப வரைக்கும் எவ்வளவு செலவாச்சு என்று 2 வாரத்துல கணக்கு சமர்ப்பிக்க தான் சொல்லிருக்காங்க.

"The Union Budget for Financial Year 2021-2022 had earmarked Rs35000 crores for procuring vaccines. In light of the Liberalized Vaccination Policy, the Central Government is directed to clarify how these funds have been spent so far and why they cannot be utilized for vaccinating persons aged 18-44 years", the Supreme Court observed.

இந்திய ஒன்றியத்தின் நிதி அறிக்கை (Budget 2021-22), இது ஒரு முழு நிதி ஆண்டிற்க்கானது (FY 2021-22) அதாவது 2021 ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் 2022 மார்ச் 31 ஆம் தேதி வரை தேவையான நிதி ஒதுக்கீடு. இது 12 மாததிற்கு ஆகும் செலவு. அப்படியானால் தற்ப்போது வரை 2 மாதங்கள் ஆகியுள்ளது (சராசரியாக வைத்தால், சுமார் 5800 கோடி வரை இதில் செலவு செய்திருக்கக்கூடும்).

வெளிப்படையாக கொடுக்கப்பட்ட விவரங்களிலிருந்து:

1. SII (Covishield கொள்முதல் முன்பணம் சேர்த்து): Rs. 3639.67 கோடிகள்.

2. BBIL (Covaxin கொள்முதல் முன்பணம் சேர்த்து): Rs. Rs. 1104 கோடிகள்.

3. Covaxin உற்பத்தி நிலைய மேம்ப்பாடு (BBIL - 3 Facilities): Rs. 200 கோடிகள்.

4. Phase 3 Clinical Trail (SII & BBIL): Rs. 11 +35 = 46 கோடிகள்.

இதில் மொத்தம்: Rs. 4989.67 கோடிகள் வருகிறது.

இப்போது உச்ச நீதி மன்றம் குறிப்பிட்ட “Arbitrary and Irrational” என்பதை பார்ப்போம்

”18-44 வயதினரும் அதிகம் பாதிக்கப்படும் இந்த நிலையில், அவர்களை மட்டும் பணம் செலுத்தி தடுப்பூசி பெறச் சொல்லும் கொள்கை நியாயமற்றதும், முரண்பாடானதுமாகும்” என்று உச்ச நீதிமன்ற சாடுகின்றது.

”Due to the changing nature of the pandemic, we are now faced with a situation where the 18-44 age group also needs to be vaccinated, although priority may be retained between different age groups on a scientific basis. Hence, due to the importance of vaccinating individuals in the 18-44 age group, the policy of the Central Government for conducting free vaccination themselves for groups under the first 2 phases, and replacing it with paid vaccination by the State/UT Governments and private hospitals for the persons between 18-44 years is, prima facie, arbitrary and irrational.”

பி.கு.: மாநில அரசுகளும் 2 வாரத்திற்குள்ளாக தங்கள் நிலை குறித்தும் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.

Copy of Supreme Court Order: 

https://www.livelaw.in/pdf_upload/supreme-court-suo-moto-covid-case-order-may-31-394369.pdf 

இவை மூன்று விஷயம் முக்கியமாக பட்டதால் குறிபிட்டுள்ளேன். தாங்கள் கூறுவது போல தென்மாவட்டங்களின் வளர்ச்சிக்கு உதவக்கூடிய சேது சமுத்திரம், சாகர்மாலா, எட்டு வழிச்சாலை, தொழில் பேட்டை திட்டங்களுக்கு முட்டுகட்டை போடும் இனவாத, மதவான, சுற்றுசூழலியல் வாதங்களை பின்னர் வேறு கட்டுரையில் காண்போம்.

Sunday 6 June 2021

மத்தியில் ஆளூம், இந்திய ஒன்றிய அரசு!!

மயில் சாமி அண்ணாதுறை அவர்கள் குறிபிட்ட, நம்மில் பலர் அவர்களாய் இருக்கும் குழுவின் துணை தலைவர் கூறுவதை கேளுங்கள்.

கூட்டாட்சி இல்லை, அதையும் தாண்டி வலிமையான ஒன்றியம் (Strong Union  என்பதா? இல்லை Federal with Strong Centre என்பதா? இல்லை Federal with Strong Union என்பதா?) இவர் போன்றவர்கள் தங்கள் கூடாரத்திலிருந்து கர்ஜனை செய்வார்கள் இல்லையென்றால் எதிர் தரப்பி வலிமை குறைந்த ஆட்களை அழைத்து "தன் வித்தையை காட்டுவார்கள்." அவளவுதான்!! செய்தியாளர்கள் எல்லாவற்றுக்கும் தலையை மட்டும் ஆட்டுவார்களே ஒழிய ஒருபோதும் குறுக்கு கேள்வி எழுப்பவே மாட்டார்கள்.

First to begin with "State" as per Constitution of India, Yes, it talks about two "states"

At one place it mean the Government in general (Bharat Sarkar or Respective State Government)

Other place it specifically describe the Units of the Federation.

No place even Constitution of India mention something as "Union Government"


ஆம் "மாநிலங்களின் ஒன்றியம்/Union of States" என்றும், ஒன்றியம் (The Union shall..) இதை செய்யலாம், தடுக்கலாம், கட்டுபடுத்தலாம் என்று தான் அரசியல் அமைப்பில் சொல்லப்படுகிறதே ஒழிய குறிப்பாக "ஒன்றிய அரசு/ Union Government" என்ற பதம் ஒரு இடத்தில் கூட குறிப்பிடபடவில்லை.

Article 1 of Part I says, India that is Bharat, will be Union of States (மாநிலங்களின் ஒன்றியம்) that's clear, they are Integrated Union. They cannot be divided which was clearly expressed by our Modern Manu Dr.B.R.Ambedkar, " Though the country and the people may be divided into different states for 'Administrative Convenience', the country is 'one integral' whole, its people a single people living under 'a single imperium' derived from a single source."

In Part V of Indian Constitution, It is mentioned as "The Union", it dictates as... "Union shall make law, Union shall do this, that... et al"

Now coming to the practical problem, India is the Union, it means all the states(units) together. Then if I say something as responsibility of Union, who the authority is been addressed? To avoid such vagueness, in certain places the term "Centre" or "Central" comes into play.

Example: Cenvat (Central VAT), Central Election Commission, Central Planning, Central GST (CGST as part of GST), Central Act (Regarding  common subjects of Concurrent list)

For your information, the terms like "Central Law", "Central University" "Central Act" have been added to Constitution through Amendment provision of Article 368 (After Emergency Regime).

Part IX & X of the Constitution use the term "Central Government" in the devolution of power to Local Government beyond the "Federal System (Centre - System)" In fact, this amendment includes "Panchayat Union - ஊராட்சி ஒனறியம்" similar to Union of States, it is Union of Gram Sabhas or Villages.

And Further more to add, India is not Federal like US where States can withdraw from the Federation and make its own Constitution. It is neither Unitary like China or UK which keeps its provinces/states weak. In some place Bharat Sarkar is Federal and other places it is Unitary. 

எதுவாக இருந்தாலும் அரசியல் அமைப்பு இந்திய ஒன்றிய அரசுக்கே அதிக அதிகாரத்தை கொடுத்துள்ளது. அதானால் அது "வலிமையான மத்திய அரசாக" செயல்படுகிறது. 42, 73 மற்றும் 74 வது அரசியலமைப்பு சட்ட திறுத்தங்கள் "மத்திய அரசு", "மத்திய சட்டம்", "மத்திய நிதி" என்ற வார்தைகளை செர்ததும் குறிப்பிடதக்கது.

And finally, Even if we call it Central Government (மத்திய நடுவன் அரசு) or Union Government (இந்திய ஒன்றிய அரசு), Constitutional Powers of "The Union" remains as such without any disturbance. Nothing going to change except your Participation, Vigilance or Focus on Current Governments Commission and Omission. 

Mere a Diversion Startegy 🤷🏾‍♂ Anyways, let me conclude it.....

உங்க ஆளே சொல்லிட்டார், மாநிலங்களை இரண்டு மூன்று துண்டா கூட பிரிக்கலாம் ஆனால் ஒருபோதும் மாநிலங்கள் ஒன்றியத்திலிருந்து தனியாக பிரிந்து செல்ல முடியாதாம்.

It is indestructible Union, with destructible States.

இனிமே அடைந்தால் "திராவிட நாடு" இல்லையேல் சன் டீவியில ஏழு மணிக்கு கல்யாண வீடு சொல்லிட்டு போகனும்.

புரியுதா!!

இந்திய ஒன்றிய அரசோடு ஒன்றிணைவோம் வா!!

Monday 28 December 2020

பம்பர் கார்டுகள் பாதசாரிகளுக்கு கடுமையான அச்சுறுத்தல்!!

இதுபோன்ற பம்பர் கார்டுகள் பாதசாரிகளுக்கு கடுமையான அச்சுறுத்தல் என்று மனுதாரர் கூறுகிறார். (Nov 2020 - Madras High Court)

https://youtu.be/OmB27e68Suw

இந்த பம்பர் கார்டுகளின் காரணமாக மட்டுமே விபத்துக்களில் எலும்பு மாற்று அறுவை சிகிச்சைகள் எழுகின்றன. நவீன வாகனங்கள் அவை தாக்கத்தை குறைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன, இதனால் பயணிகள் மீதான தாக்கத்தையும் குறைக்கலாம்.

அத்தகைய பம்பர்களை நேரடியாக வாகனத்தின் சேஸ் அல்லது ஃபிரேமில் பொருத்துவதனால், விபத்தின் போது மனித உயிர்களின் மீதான தாக்கத்தையும் சேதத்தையும் இரட்டிப்பாக்குகிறது. விபத்துகளின் போது உயிருக்கு கடுமையான ஆபத்தை ஏற்படுத்துகிறது.

மேலும், இதுபோன்ற பம்பர் கார்டுகள் ஒரு தாக்கத்தின் போது உயிர்காக்கும் ஏர் பேக்ஸின் செயல்பாட்டைத் தடுக்கும், என்றார்.

பல நாடுகளில், இதுபோன்ற பம்பர் கார்டுகள் கடந்த காலங்களில் பொலிஸ் இன்டர்செப்டர் கார்கள் போன்ற நியமிக்கப்பட்ட வாகனங்களில் மட்டுமே பயன்படுத்தப்பட்டன, அவற்றின் வடிவமைப்பு மற்ற வாகனங்களைத் தடுத்து நிறுத்துவதே ஆகும்.

எனவே, இதுபோன்ற அனைத்து பம்பர் கார்டுகளையும் தங்கள் வாகனங்களில் இருந்து அகற்ற அனைத்து பயணிகளுக்கும் நியாயமான நேரம் வழங்குமாறு மாநில போக்குவரத்து அதிகாரிகளுக்கு உத்தரவிடுமாறு அவர் நீதிமன்றத்தை கேட்டுக்கொண்டார். அவர்கள் அவ்வாறு செய்யத் தவறினால், அதிகாரிகள் கவனிக்கும்போது அவற்றை அந்த இடத்திலேயே அகற்ற வேண்டும்.

இதுவரை கொடுத்த விளக்கம், சுய புத்தியோ, சொல் புத்தியோ உள்ளவர்களுக்கு....

ஜனனாகத்தில் மாற்று கருத்து என்பது இயல்பு என்ற அடிப்படை அறிவுகூட இல்லாமல் மற்றவர்களை சங்கி என்றும், உ.பி.ஸ் என்றும் வசைபாடும் அறிவிளிகளுக்கு...

இந்த விளக்கத்தை பெரியார் மொழியில் சொல்வதாக ஓர் கற்பனை!!

அடேய் தற்குறி பசங்களா!!

அடேய் மென்டல்களா!!

கார்ல பம்பர் உங்க கார் சேதம் ஆகாம பாதுகாக்கும், விபத்துகளில் சிக்குபவர்கள் எலும்ப உடைத்துவிடும்.

ஏர்பேக் ஓப்பன் ஆகாது என்பது ஒரு காரணி... ஆனால் பெரும்பாலும் ஆர் பேக் உள்ள வாகனங்களில் பம்பர் பொருத்தப்படுவதில்லை...

அதிகமாக டிராவல்ஸ் வாகனங்களில் பெரும்பாலும் குட்டி யானை (Load Vehicle) களில் தான் பம்பராகள்  பொருத்தப்படுகிறது... டிரவல்ஸ் ஓனர்களின் அம்பானி மூளை... டிரைவர் பற்றியோ, எதிர் வருபவர் பற்றியோ அவனுக்கு கவலை இல்லை... தன் வாகனம் சேதமாகக்கூடது என்பதே முதன்மை!!

வெலக்கெண்ணைகளா, எந்த வாகனமாவது தொழிற்சாலையிலிருந்து வெளிவரும்போது பம்பரோடு வருகிறதா??அது கூடுதல் செலவு என்ற வாதத்தை வைத்தால், எந்த ஆடம்பரமான வாகனமும் கூட பம்பருடன் வருவதில்லை என்பது குறிப்பிடதக்கது.

இந்த நடவடிக்கை 2017 WHO பரிந்துரை பேரில் துவங்கப்பட்டது.... உங்கள மாதிரி முட்ட பசங்க மத்தியில ஆக்கப்பூர்வமாக ஒன்றும் செய்ய முடியாது....

இந்த வெங்காயங்கள் எல்லாம், விவசாய மசோத, இந்திய பொருளாதாரம், தடுப்பூசி மருத்துவம் பற்றி எல்லாம் பேசுவானுங்க!!

சாபக்கேடு.

Monday 16 November 2020

மாறன்கள் சூரரை தூற்றுவதற்கு காரணம் என்ன?

மாறன்கள் சூரரை தூற்றுவதற்கு காரணம் என்ன?

மாறன் = மோறன் 

Moron: a stupid person.

கயவன் அல்லது மன வலிமையற்றவன்.

இவர்களுக்கு "சூரரை போற்று" படத்தின் மீது என்ன காழ்புணர்ச்சி?

சூரிய ஏற்று நடித்த கதாபாத்திரம் "ஏர்-டெக்கன்" விமான சேவையின் உரிமையாளர் கேப்டன் கோபிநாதன். அவர் பிறப்பால் பிராமணர். அதை குறிப்பிடும் வகையில்  சூர்யாவின் தந்தை ஒரு ஆசிரியராக (வர்னாசிரம புரிதல் படி ஆசான்கள் பிரமனர்) காட்டப்பட்டுள்ளது!!

நீங்கள் கூறுவது போல "சங்கி" மனோபாவமோ.. "பெரியாரிய" மனோபாவமோ...ஆரியமோ, திராவிடமோ... உங்களுக்கெல்லாம் பாதி மூளைதான் வேலை செய்யுமா என்ன??

தோசை கதை சொல்பவர் என்ன திடீரென திரைவிமர்சகராக மாரி விட்டார்?

OTT தளத்தில் படத்தை வெளியிட்டதால் தன் முதளாலிகளுக்கு ஏற்பட்ட நஷ்டமாக இருக்குமோ!!?

தன் விமான சேவை "வானத்தில் பறக்கும் ஒரு உடுப்பி ஓட்டல்" அதுவே கேப்டன் கோபிநாதின் கனவு!! உங்க முதளாலி சரவனாபவன் என்பதால் கேப்டன் அவர்களின் வார்தைகளை மாற்றியா பிரதிபளிக்க முடியும்??

"பெரியார்" என்று இதே போல ஒரு  Biopic திரைபடம். சமூக சீர்திருத்தவாதி இரட்டைமலை சீனிவாசன் 1893 ஆதி திராவிட மஹா சபை துவங்கியவர். இந்த ஆண்டுகளில் நம்ம நாயகர் எங்க இருந்தார் என்பது நமக்கு வேண்டாம், 1939 இல் தான் தலைவர் த.நா. அரசியல் சீன்லய வராரு, அனால் அந்த படத்திடல் இரட்டைமலை என்று ஒரு கதாபாத்திரத்தை சித்தரித்து பெரியாரின் உதவியாளர் போல காட்டும் அயோக்கியதனத்தை காட்டிலும் இந்த Biopic படத்தில் பெரிய பிழையேதுமில்லை!!

1. வீரன், சூரன், சூரபதுமன்.

2. அசுரன், அரக்கன், இராட்சதன்.

3. நரகாசூரன்.

4. சூரசம்ஹாரம்.

5. சூத்திரன்.

இந்த எல்லா வார்தைகளையும், சொற்களையும் பின்னிபிசைந்து கதை சுற்றும் கும்பல் நம் அறிவையும், நம்மையும் வளரவே விடாது. 

தனிமனித வளர்ச்சியில் தான் சமுதாயத்தின் வளர்ச்சியும் உள்ளது!!

அதனை ஒரேதடியாக தன்முனைப்பு (Selfishness) எனறிடமுடியாது.

அரசாங்கமும், அமைச்சர்களும் கேப்டன் கோபிநாத் போன்றவர்கள் சாதிக்க உதவினார்கள் என்பதை இந்த படம் பெரிதும் வெளிபடுத்தவில்லை. 

தொழில் முனைவோர்களின் பிரட்சனை, சந்தை பொருளாதாரத்தின் முற்றுரிமை & நிறைவுப் போட்டி சிக்கல்கள். 

சாதி, மதம் இல்லை பணம்(முதலீடு) தான் முதல் பிரட்சனை. இரண்டாம் பிரட்சனை தன்னம்பிக்கை/விடாமுயற்சி.

சாதி, மதம் என்ற கூற்றுகளை, பார்வைகளை தவிர்த்து ஆகவேண்டிய வேலைகளில் கவனம் செலுத்துவதே சிறப்பு!!

For the Brave Hearts

Friday 25 September 2020

எல்லாம் தெரியும் என்ற முட்டாள்தனம்!!

 #Dunning kruger effect

உதாரனமாக கம்பராமயனம், மகாபாரதம் பற்றி துவங்கி டாஸ் கேப்பிடல் வரை விமர்சிப்பவர்கள் பெரும்பாளும் அதன் மூன்றவது பக்கத்தை கூட புரட்டி இருக்க மாட்டார்கள்!!

#OverConfidence Effect

"அதிகம் தெரிந்தவன் தன்னை குறைத்து இடை போடுவதும், அரைகுறை தெரிந்தவன் தன்னை மிகைபடுதிக்கொள்வது என்பது இயல்பு"- இது உளவியல் கோட்பாடுகளில், டன்னிங்-க்ரூகர் விளைவு என்பது ஆகும்.

#Illusionary Superiority

 இது ஒரு அறிவாற்றல் பற்றிய சார்பு (Function), இது ஒரு மாயையான  புரிதல் சார்ந்தது. 

Refer: We are all confident idiots!!

இந்த Machine Learning யுகத்துல, மன்னுல செஞ்ச கம்பியூட்டர் போர்டு கூட வர தகவல் சரியானதா என்று மாற்று தரவுகளை கொண்டு சரி பார்கிறது Artificial Intelligence பயன்படுத்தி!

நான் கேட்குறேன், உனக்கு தான் Natural Intelligence இருக்குல அத கொஞ்ச Calculator ல இருக்க Chip அளவு கூட பயன்படுத்த மாட்டேன் என்றால்....

என்ன வென்பது!?


பெரும்பாளும் ஒரு செய்தியின் அல்லது சமூக வலைதள பதிவின் உண்மை தன்மையை சற்றும் ஆராயாமல் பரப்புபவர்/பகிர்பவர்களை இருவகை படுத்தலாம்.

முதல் வகை, தன் நட்பு வட்டத்தில் உள்ளவர்களின் முட்டாள் தனத்தை பயன்படுத்தி பணம் ஈட்ட நினைப்பவன்!

இரண்டாம் வகை அவனே ஒரு முட்டாளாக இருப்பான்!!

அரசியல் காழ்ப்புணர்ச்சியை தவிர்ப்போம்!!!

#BewareofFakeNews

#BeResponsible

#சுயமரியாதை


Wednesday 23 September 2020

நம்மை முட்டாளாக்கும் தலைப்பு செய்தி விவாதங்கள்

 

தலைப்பு செய்தியை மட்டும் வைத்துக் கொண்டு விவாதம் செய்யும் முட்டாள் கூட்டத்திற்கு நடுவில் தான் நாம் இன்று வாழ்கிறோம்.

கடந்த வருடம் செய்திதாள்களில் வந்த ஒரு செய்தி.... 

"ஒன்பதாம் வகுப்பு கேள்வித் தாளில் சர்ச்சை: காந்தி எப்படி தற்கொலை செய்து கொண்டார்?"

இதை பார்த்து எனக்கு ஏற்பட்ட பகுத்தறிவு கேள்விகள்...

1. அச்சு பிழையா?

2. ஆசிரியரின் தவறா?

3. மொழிப்பெயர்ப்பு பிழையா?

4. வராலாற்றை சிதைக்க, காந்தியை அவமதிக்கும் கூட்டத்தின் வன்மமா?

முதல் அந்த பள்ளிகூட புத்தகத்தில் காந்திய பற்றி என் இருக்கு என்று தெரிந்தால் தான் முடிவுக்கு வரமுடியும். அதில் "தற்கொலை" பற்றி காந்தியின் கருத்து இருந்தால், இது அச்சு பிழையாக தான் இருக்க வேண்டும். இல்லை, அவர் "சத்திய சோதனை"யில் சொல்வது போல தான் சிறுவனாக தற்கொலைக்கு முயன்றதை பற்றி இருப்பின் அது கேள்வியின் பொருட்பிழை, ஆசிரியரின் தவறும் கூட!!

பாகுபாடுடைய அறிவிற்கு எதிர் கேள்விகள் தோன்றாது.

எனக்கு தெரிந்து, இதுவரை எந்த பத்திரிக்கையும் அந்த பள்ளிகூட பாடத்தின் நகலையோ, பிழையையோ பற்றி ஏதும் வெளியிடவில்லை!! (ஒரு செய்தியை எப்படி அணுக வேண்டும் என்பதற்கு எடுத்துகாட்டு மட்டுமே)

நீங்க முட்டாளாக இருக்க முழு உரிமை உங்களுக்கு உண்டு!! மற்றவர்களை முட்டாளாக்க முயற்சிப்பதை கைவிடுங்கள்.

Be a Voice, Not an Echo!!!